இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைவர் முடிவுரை
- சிறை வாழ்ந்தார்.... செக்கிழுத்தார் - இந்தத்
- தரையாண்ட வெள்ளையரை விரட்டுதற்குக்
- குறை ஆயுள் பெற்றது பலர் கொலையும் உண்டார்
- உறை மீறி வெளிவந்த கத்திபோல
- உயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார்.
- அவர் பெருமை கூறுதற்கு
- அணிவகுத்த இந்த நாளில்
- விடுதலைக்கு உயிரீந்த
- எவர் பெருமை கூறுதற்கும்
- இவர் போலக்
- கவி வளத்தைப் பெற்றேனில்லை
- கவிதை பாடக் கற்றேனில்லை.
- தலையறுத்த வீரர் கதை பாடுவதால்
- தளை யகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர்
- தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால்
- தொடை தட்டும் என் பாட்டும். என் கவிதை,
- யாப்பின்றிப் போனாலும் போகட்டும் - நம்நாடு
- மொழி, மானம் உணர்வெல்லாம்,
- கரப்பின்றிப் போதல் கூடாதெனும் கொள்க யொண்குல்
- வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்சுக்
- காய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல் - நெஞ்சில்
- ஊருகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக் கொள்கை
- மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று செல்வேன்
- எத்தனை உயிர்கள்
- எத்தனை சத்தம்
- நித்தமும் தந்து பெற்றது விடுதலை.