சமயம் . 121
64. பால்நிறக் கடவுள், நீலநிறக் கடவுள் யாவர்
பால்நிறக் கடவுள் பல ர | ம ன். நீலநிறக் கடவுள் கண்ணன். விநாயகரையும் பால்நிறக் கடவுள் என்று அருண கிரியார் கூறுவார்.
65. சீதை இராவணன் மகள் என்பதற்கு இலக்கியச் சான்று உண்டா ?
வால்மீகி ராமாயணத்திலோ கம்ப ராமாயணத்திலோ அதற்கு ஆதாரம் இல்லை. ஆலுைம் தமிழ் நாடோடிப் பாடல் களிலும் வேறு மொழிகளிலுள்ள நாடோடிக் கதைகளிலும் சீதை இராவணனுக்கு மகளாகப் பிறந்த வரலாற்றுக்குரிய குறிப்புகள் கிடைக்கின்றன. இலங்கையிலே நான் பிறந் தேன்’ என்பது தமிழ் நாடோடிப் பாட்டில் வரும் அடி.
66. சைவர்கள் பிள்ளையார் சுழியைப் போடுவது போல வைஷ்ணவர்கள் எதை முதலில் போடுவார்கள் ?
பூரீ என்னும் எழுத்தை எழுதுவார்கள்.
67. தசரதனுடைய மனைவியருள் இளையவள் யார் : சுமித்திரையா, கைகேயியா ? - -
சுமித்திரையே நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்ப தாக்கி, இறந்தான்றன் இளந்தேவி என்பது கம்பராமாயணம்.
68. சிதாபிராட்டி அநுமனிடம் அடையாளமாகக் கொடுத்த சூடாமணி என்பது என்ன t - - ".
சூடாமணி என்பதற்குத் தலையில் அணியும் மணிகளோடு கூடிய ஆபரணம் என்று பெயர். அது முன் தலையில் வகிடு பிரியும் இடத்தில் மங்கையர் அணிவது. அதைச் சுட்டி என் . றும் சொல்வர். இந்த நாட்டில் குழந்தைகளுக்கே பெரும் பாலும் சுட்டியை அணிகிருேம். வட நாட்டில் இன்றும் 。 、 : 。 .・ー ' :' 9 سامهاته .