இலக்கண இலக்கியம் 59
கொள்ளலாம். ೯೮.೯Tಷಿ ಹ குறிப்பதாகக் கொள்ள வ்ேண்டிய அவசியம் இல்லை.
240. இராமலிங்க சுவாமிகள் இயற்றிய ரீராம நாமத் திருப்பதிகத்தில் வரும் ஒரு பாட்டில் பூவை என்று வருகிறது. பூவை என்பது பூவரசம் பூவைக் குறிக்கிறதா ?
'அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன் ஆருயிருக் கொருதுணையே யரசே பூவை நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே.' காயாம் பூவைக் குறிக்கும் ; அது நீல நிறம் உடையது.
241. ஆன்முலையேறுத்த' என்று தொடங்கும் புறநானூறு 34-ஆம் பாடலில், அறம்பா டிற்றே ஆயிழை கணவ என்ற அடியில் வரும் அறம் என்பது எந்த நூலைக் குறிக்கிறது ? - பண்டை அற நூலைக் குறிக்கிறது. சிலர் திருக்குறளைக்
குறிப்பதாகக் கொள்வர். - - -
242. பாரதியார், மங்கியதோர் நிலவினிலே என்று தொடங்கிப் பாடிய அழகுத் தெய்வத்தைப் பற்றிய கவிதையில் காலிலே ஒன்றிரண்டு படித்திடலாம் என்ருள் என்பதன் பொருள் என்ன ?
"ஞாலத்தில் விரும்பியது நண்ணுமே என்றேன். நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்ருள் என்பது அந்த பகுதி. பவித்திடலாம் என்பதே சரியான பாடம், விரும்பியதில் கால் பகுதியோ அரைப் பகுதியோ பலிக்கும் என்பது பொருள். ' - .
243. பெருமனக் கிழத்திக்கு, நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங், கெண்ணன் கறமும் இயற்றி என்று சிதம்பர