பக்கம்:விடையவன் விடைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - விடையவன் விடைகள்

உம்பர் தருவாகிய கற்பகம், காமதேனு, சிந்தாமணி இந்த மூன்றும் கேட்டவற்றையெல்லாம் தரும். அவற்றின் சாரத்தைப் போல விநாயகரும் கேட்டவற்றைத் தருவார் என்பதைக் குறிக்கிறது. உம்பர்தரு - கற்பகம்; தேனு - காமதேனு; மணி - சிந்தாமணி, கசிவு - சாரம். -

250. முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் என்ற தனிப் பாடலில் முன்னரையில் வீழாமுன் என்ற தொடரின் பொருள் என்ன ?

"முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் அக்கா லன்ரக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரையின் ருேது' என்பது பாடல். முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்ற பின்ன எண்கள் தொன்ரிக்கப் பாடியது. மூன்று காலால் நடக்கும் முதுமைப் பருவத்தை அடைவதற்கு முன், முதுமையைத் தோற்றி, முன் அடையாளமாக வரும் நரையிலே வீழ்வதற்கு முன், அந்த யமனை மூச்சுக் காற்றுக் கண்டு அஞ்சி நிற்பதற்கு முன், விக்கி இருமுவதற்கு முன், பெரிய இடமாகிய சுடுகாட்டுக்குப் போவதற்கு முன், காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமரத்தின் கீழே எழுந்தருளியிருக்கும் பெருமான இன்று சொல்வாயாக’ என்பது பொருள். முன் நரையில் வீழாமுன் என்று பிரித்துப் பொருள் செய்ய வேண்டும்.

251. திருவள்ளுவர் பரத்தையர், சூது பற்றி எச்சரிக்கை செய்துள்ளாரே, இவை அவர் காலத்துக்கு முன்பே இருந் தனவா? - - - - - -

ஆம். அதனுல்தான் அவற்றின் தீமையைக் குறித்துப் பாடியிருக்கிரு.ர். . . . . . . . . . . . . . . . .

- 252. பாரதியார் தம் புதிய ஆத்திசூடியில் கோல் கைக் கொண்டு வாழ் என்கிறர். அதன் பொருள் என்ன?