பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. xiv முனைவர்கள் பலபேரைப் படைத்த தாலே முதுமுனைவர் என்றிவரைச் சொல்ல வேண்டும்; அனைவருமே ஒருமனமாய் அளித்து வாழ்த்தும்

  • அருங்கலைக் கோன் பட்டத்தை அடைந்த

சான்றோர்; கனவுழைப்பால், தமிழரசால், தமிழ்வ ளர்ச்சிக் கழகத்தால் சென்னைப்பல் கலையால் எட்டு நினைவரிய பரிசுகளைப் பெற்ற மேலோர்; நிகரற்ற இவர்பெருமை நிகழ்த்தப் போமோ? இத்தகைய பேரறிஞர் எழுதி யுள்ள எளியநடை இனியதமிழ்க் கிருப்பே யான வித்தகராம் விட்டுசித்தர் விரித்துச் சொன்ன வீறு தமிழ்ப் பெருமைதனை விளக்கும் இந்நூல் இத்தரையில் தமிழ்வாழும் வரையில் வாழும்: இருந்தமிழில் இதுபோலத் தமிழர்க் கெல்லாம் சொத்தான பலநூல்கள் இயற்றி எங்கள் சுப்புரெட்டி யார்.உலகில் நீடு வாழி! ‘ஏழிலைச் சூழல்' 8|35, மறைமலையடிகள் சாலை, g - புதுச்சேரி- ல்500 இரா. திருமுருகன் '6.5-1987 - | தொ. பே. 4391 J