பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 38 விட்டு சித்தன் விரித்த தமிழ் துணிகள் வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் நாம் பார்த்த துணி ரகங்கள் தாம். ஆனால் கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் துணி வருகின்றது. துணிச் சந்தையில் கிடைக்காத ரகம்; யாரும் இதுகாறும் பார்க்காத ரகம். இத்துணி துரியோதனனின் மனத்தைக் கவர்கின்றது. ஐந்து மீட்டர் வீதம் 100 துண்டுகளைக் கிழிக்கச் செய் கின்றான். திரெளபதி அவமானப்படுத்தப்படும் சபையில் 100 ஆசனங்களை போடச் செய்கின்றான். தன் மனைவி தம்பிமார் மனைவியர்களை இத்துணிகளை உடுத்திக் கொண்டு வந்து ஆசனங்களில் வரிசையாக அமரச் செய்து அவமானச் செயலைக் காணச் செய்கின்றான். தொலை விலிருந்தாலும் கண்ணனுக்கு இது பொறுக்குமா? உஸ்... என்று ஒர் ஒலி கேட்கின்றது. 100 பேர்கள் உடுத்திய சேலைகளும் மறைகின்றன. நல்ல வேளையாக உள் 盘_霹帮”硫醇荔”叙}盘_。 அவர்கள் மானத்தைக் காக்கின்றது. கண்ணனுக்கும் இது தெரியும்! பெண்கள் யாராக இருந் தாலும் அவமானப்படுத்தக்கூடாது என்பது அவனுக்குத் தெரியாதா, என்ன? துரியோதனனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற கண்ணனின் உக்திதான் இது! தங்க மயமான காதணிகளையுடைய பிராட்டிக்காகக் கணைகளைத் தொடுத்து அரக்கப் பூண்டுகளை அழித்தவன் (7), தீயைக் கக்கும் அம்புகளைத் தொடுத்து இலங்கை நாதன் மீது பாய்ந்து அவன் புரிந்த அநீதியைக் குலைத்தவன் (8). இரணியாட்சன் பாயாகச் சுருட்டிக் கொண்ட பூமியை வராக அவதாரங் கொண்டு அண்டபித்தியினின்றும் தன் எயிற்றினால் பிரித்தெடுத்தல், வாமன அவதாரங் கொண்டு மகாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட பூமியை அங்கையில் நீரேற்று வாங்கிக் கொண்டு திரிவிக்கிரமனாகி அதனை மூன்றடியால் அளந்து அருளியவன்; மீண்டும் அவாந்தரப் பிரளயத்தில் அழிந்து போகாமல் அந்தப் பூமியை திருவயிற்றில் வைத்து நோக்கி, பிரளயம் கழிந்ததும் வெளிப்படுத்தியவன். இவையனைத்தையும்