பக்கம்:விதியின் நாயகி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அத்தான் தெய்வம்! அடுத்த சட்டத்தில்தான் நீங்கள் தெய்வ உருக்கொண்டு வந்தீர்கள். விட்ட குறை-தொட்டகுறையின் விளைவுகள் சரித்திரப் பிரசித்தம் அடைந்தவையாகும். உங்கள் மனங் கவர்ந்த அடியாளின் வேண்டுகோள் இதுவே என் அத்தான் அவர்களுக்கு இன்றைய அளவில் என் ஒருத்தியைத் தவிர, வேறு எந்த ஆதரவோ, நிழலோ இல்லை. ஆகவே, என் அத்தான் என்றென்றும் நம்முடனேயே இருக்க தாங்கள் பெருந்தன்மை கொண்டு அனுமதி தரு வீர்களா? நான் உணர்கிறேன்: தாங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு, இதயபூர்வமானதொரு மகத்தான நம்பிக்கையின் வாய்மடையில் ஜனித்திருப்பதாகும். விதியும் காலமும் தோற்றுவித்த புதுவெள்ளப் பெருக்கில் கலந்திருந்த துரசு தும்பட்டையெல்லாம் மடைவாயிலேயே தங்க, அதன்பின் பிறந்து ஓடிவரும் நிர்மலமான புதுநீர் போன்ற தங்கள் பாசத்தை நான் தீர்க்கமாக அறிவேன். உங்களது அடையா நெடுங் கதவமான அந்த அன்புக்கு-அந்தப் பாசத்துக்கு என்னுடைய இந்த விண்ணப்பம்-உண்மைநிலை தாழ்’ எதையும் இட்டுவிடலாகாதேயென்ற பயத்தில்தான் முன் கூட்டியே தங்கட்குத் தெரிவிக்கலுற்றேன். இந்த ஒரு வேண் டுதலையின் தலைவாயிலில் நின்று, பலன் எதையும் கருதமாட் டாத பக்தை என்ற நிர்ணயிப்பில், தாங்கள் என் அன்பை மதித்து, உரிய மதிப்பு அருளுவீர்களாயின், என்னைப்போல இப்பூவுலகிலே பாக்கியவதி வேறு யாரும் இருக்க இயலாது: அன்பு எதையும் கேட்காது. ஆனால், தங்களிடம் கேட்டு விட்டது! தங்கள் தாய் தந்தையரின் அனுமதி கூட்டி, கைகூடி வந்த நல்ல தகவல் ஒன்றினைத் தங்கள் மறுமொழியாக மறு: