பக்கம்:விதியின் யாமினி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 நெருப்பைத் தொட எத்தனம் புரிபவரை ஒப்ப, அவர் எழுந்து கீழண்டைப் பக்கம் நடந்து, காட்ரெஜ் பீரோவைத் திறந்தார். அன்று வந்த முடங்கலே எடுத்தார். புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அனுப்பிய உள்ளத்தின் பெயர் மட்டுமே கண்டிருந்தது. முகவரி கிடையாது ! காசி, நீ போய் வேலையைப் பார் !....அப்புறம் தேவைப் பட்டால் கூப்பிடுகிறேன் !' என்று அவனே அனுப்பினர். கடிதம் கை நழுவியது. வெஞ்சினமும் விரக்தியும் கூட்டுச் சேர்ந்து, அவரது கைப் பேணுவைத் தரையில் போட்டுவிட்டன. அவர் கைமுறுக்கைப் பறிகொடுத்த கைக்குழந்தையென அப்படியே சிலேயாய் கின்ருர், நெஞ்சின் இருள் அறையைச் சூழ்ந்திருக்க வேண் டும். விளக்குப் பொத்தானே அழுத்தினர். அறை இருட்டு ஒடியது. ஆனல் மன இருட்டு அவரைக் கதிகலங்க வைத்துச் சிரித்தது. யாமினி, நீ எங்கு இருக்கிருய் ' என்று மெல்ல சன்னக் குரலெடுத்து வினவினர். 'இதோ !' என்ற குரல் ஒன்று வி&ணயின் சுநாதமாய் பூந்தென்றலில் மிதந்து வந்தது. செந்தில்நாயகம் அக்கம் பக்கம் திரும்பினர். குரல் எங்கிருந்து பேசியது ?.சுற்றிச்சூழ நோக்கினர். யாரு மில்லை ! பலத்த நகைப் பொலி எதிரொலித்தது. நெஞ்சில் கை வைத்துப் பார்த்தார். அது சுட்டது. இதோ என்ற குரல் புறப்பட்ட இடம் அவருக்குப் புரிந்து விட்டதோ ? அழகின் ஆதர்சமாக-பொற்பின் பொழிப்புரையாக தம் முடைய நினைவிலும் இதயத்திலும் அந்த யாமினி நடமாடி, கள்ள் நகை இழைப்பதை அவர் உணர்ந்தார். அவரது மனம் உணர்ந்தது. வேர்வை மணிகள் எங்கும் நிரம்பின. அப்போது, 'ஐயா, வணக்கம் வருதுங்க " என்ற ஆணித் தரமான குரலே முன்னுேடவிட்டு, பின் நடந்து வந்தான் மகேந்திரன். பட்டு ஜிப்பாவும் பகட்டுத் தாம்பூலக் கோலமும்