பக்கம்:விதியின் யாமினி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2岛 அறியறதுக்கு முக்தியே நான் கேள்விப்பட்டேனுங்க. ஆ,ை கோபம் உள்ள இடத்திலேதான் குணமும் இருக்குமிங்கிற சங்கதியையும் உங்ககிட்ட பழகின இந்தச் சொற்ப நாளிலே புரிஞ்சுக்கிடவும் செஞ்சிட்டேனுங்க...நீங்க என்னேக் கட்டாயம் மன்னிக்கத்தான் வேணும் ...' என்று அழமாட்டாக் குறை யாகக் கெஞ்சினர். மறு விடிையில், செந்தில் நாயகம் குபிரென்று சிரித்து விட்டார். அவர் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொளுத்தினர். அவனிடமும் ஒரு சிகரெட்டை நீட்டினர். 'ஊம் !" என்று தூண்டிவிட்டுச் சிரித்தார். புகை மண்டலத்தில் ஜோடிச் சிரிப்பு' திக்குமுக்காடிப் போயிற்று : இப்போது, செந்தில் நாயகம் புகையை இழுத்தபடி, ஸ்டுலில் கிடந்த தமிழ்ப் பத்திரிகை ஒன்றை எடுத்துப் பிரித் தார். பிரித்துக்கொண்டே, ஏதோ ஒரு நினைப்புடன், "அப்புறம்.என்ன விசேஷம், மகேந்திரன் .' என்று வின விடுத்தார். 'பெங்களுரிலே உங்க காதிலே போட்டேனே ஒரு விஷ யம், அதை இன்னிக்கேகூட செட்டில் செஞ்சுப்பிடலாம் !. ஸ்டுடியோ ஹெவன்லேதான் குமரி குயில்மொழிக்கு இன்னிக்கு ஷல்ட்டிங்க் !....உங்க இஷ்டம் ?...” என்று மென்று விழுங்கின்ை மகேந்திரன். சிந்தனே வசப்பட்டிருந்தார் அவர். அதே போக்கில், 'எல்லாம் உங்க தயவுதான் ' என்று வெகு சுதாரிப்புடன் பதில் கொடுத்து, அவன் உச்சியில் ஐஸ் வைத்த செந்தில் நாயகம், புதுத் தெம்புடன் எழுந்து ட்ரஸ் செய்து கொள்ள ஆயத்தப்பட்டார். அதுசமயம், டெலிபோன் மணி ஒலி எழுப்பி, அதே சடுதி யில் இணைப்பு துண்டிக்கப்பட்டு அடங்கிய விவரத்தை உணர்ந்து கொள்ளும் நிலையில் செந்தில் நாயகம் இருக்க வில்லை போலும் ! 女 ,★ - 女