பக்கம்:விதியின் யாமினி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 ஒரிடத்தில் "ரீ ரெகார்டிங் நடந்தது. இன்னேரிடத்தில் ரஷ் போட்டுப் பார்த்தார்கள். மூன்ருவது கொட்டகையில் அன்றையப் படப் பிடிப்புக காக ஒத்திகை நடைபெற்றது. வரவேற்புக் கூடத்திலே கலகலப்பு அரசாண்டது. புகைவளையங்களினூடாக சிந்தனைப் புரவியின் மீதமர்ந்து காலத்தின் நடந்த பகுதியை அண்டியபோது, அவருக்கு எல் லாமே சொப்பனமாகவே தட்டுப்பட்டது. விண்ணிலே மேலைத் தொங்கலின் ஒரு மூலையில் பிறைச் சந்திரன் பவனி வந்தான். பட்டுக் கருநீலவானத்தின் பின்ன ணியே, அதியற்புதமான பிறைக்கு ஒரு பிடிப்பாகக் கூடி யிருந்தது. விண்ண நினைத்து, மண்ணக் கண்டபோது, சூழலின் மயக்கம் மறையத் தொடங்கியது. மீண்டும் கழிந்த காட் களின் ஏதோ ஒரு பகுதியைத் தொட்டது அவர் மனம். 责 女 女 அந்த நாட்கள்.......! . அதிசயக் குறியின் கீழ்த் தளத்தில் அமைந்திட்ட ஆனந்த மயமான தொரு புள்ளியாக அமைந்திருந்த கனவுலக நாட்கள் அல்லவா அவை: செந்தில்நாயகம் அப்போது இளமையின் பொலிவுக்கு நிதர்சனமான சாட்சியாகவும், மகிழ்வின் ஆட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நிரூபணமாகவும் விளங்கிய நேரம். படிப் பின் தொடர்நிலைக் கட்டத்தில், காதலும் நிழலுமாகத் தொடர்ந்துகொண்ட ஒரு விந்தையான காலகட்டம் செக் தில்நாயகத்திற்குச் சோதனை எதையும் வைத்துவிடவில்லே. திருச்சிப் படிப்பு. அங்தோன் காதலுக்கும் பொழுதை ஒதுக்கிட வேண்டி யிருந்தது. -