பக்கம்:விதியின் யாமினி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 இதயத்தில் மின்னல் வெட்டிப்பாய்ந்தது போல திகைத்துப் போளுர். காரணம், அங்கே அப்பொழுது, மின்னலின் உருக் கொண்டமாதிரி குமாரி குயில்மொழி கின்று வணங் கிக் கொண்டிருந்தாள். வேஷப்பூச்சின் செந்நிறம் சரியாகக் கலேயாமல், இன்னும் சில இடங்களில் அப்பிக்கிடந்தது. அவளேக் கண்டதும் எண்சாண் உடம்பும் ஒற்றைச் சாளுகக் குறுகியது. விழுங்கிய மாத்திரைகள் ஈந்த சக்தி முழுவதும் இப்போது வேலை செய்யாமல் எங்கோ உறங் கியது போலும். தடுமாறினர். வேர்வை கொட்டியது. தேள் கொட்டப்பட்டவராகத் துடித்தார். ஷூட்டிங்க் பார்க்க வங் தேன்...இந்த ஸ்டுடியோ ஒனர் என்ைேட சினேகிதர்!...சரி. புறப்படலாமா?..."என்று கூறி, அவள் முகத்தை-அந்த நேர்கொண்ட பார்வையை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சிய வராக அங்கிருந்து நழுவினர். கார்ச்சாவியை எடுத்தார். காரை இயக்கினர். மகேந்திரன் தொற்றினன். "ஐயாவுக்கு மூட் சரியில்லே போலிருக்கிறது!...” என்று காசுக்காக வார்த்தைகளைக் குளிப்பாட்டி எடுத்தான் மகேங் திரன். "குலத்தின் வழியில்தான் குணம் என்கிறது சரியான பேச்சுத்தான்!....' . "ஆமாங்க...அந்தப் பொண்ணு குயில்மொழி ரொம்பக் குணம்னுதான் தோணுது...அதை நெருங்கி கைலாய் விசாரிச் சதால் கொஞ்சம் ஹாட்டாய் பேசிடுச்சு.ஆன நீங்க இப்படி புறப்படுவீங்கன்னு. ...' - "ஒய்: நிறுத்துமய்யா...இதே பெண் தான் என்ைேட கம்பெனியில் டெஸ்பாட்ச் செக்ஷனிலே அலுவல் பார்க்கு தாக்கும்....."என்று சூடாகப் பதிலிறுத்தார் அவர். அப்படிங்களா? பழம் நழுவிப் பாலிலே விழுந்த கதை யாயிடுச்சு!...' * - - 事蒿 鬱、 @楼崎 岭总蛛