பக்கம்:விதியின் யாமினி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஈடு கொடுக்க முடியாததால், ஏர்கண்டிஷன் இயந்திரத் தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். மேஜைமீது விரிந்தபடி கிடந்த ஹிண்டு இதழ்களேப் புரட்டினர். சுதந்திரத் திருநாளின் வைபங்களே அப்புகைப் படங்கள் சித்திரித்திருந்தன. அவை எல்லாவற்றையுமே ஏதோ ஒரு வகைப்பட்ட புகைப்படலங்கள் மூடியிருந்ததைப் போல அவர் நினேத்துக்கொண்டார். அந்தப் படங்களிலே வழக்கம் போல நேருஜியைத் தேடினுரோ?-அவர் கண்கள் நீர் நிறைந்து விளங்கின. இந்தச்சமயத்திலே நேருஜி இருந் திருந்தால், இந்தப் பாகிஸ்தான்காரனும் சீனுக்காரனும் இவ் வளவு வாலே ஆட்டத் துணிந்திருக்க மாட்டான்!....ம்.....கம் பெருந்தலைவர் எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்!’ என்ற எண்ணம், அவருக்கு இதம் தந்தது. வெளிக் கதவைத் தள்ளிக்கொண்டு அப்பொழுது மானே ஜர் நுழைந்தார். டைப் செய்யப்பட்டிருந்த தாள்கள் சில வற்றை ஏந்தி வந்திருந்தார். "மங்களம் அண்ட் கோ' வின் தொழில் விரிந்தது. ஆகவே, அதன் வெவ்வேறு சிறு அமைப்புகள் சம்பந்தப்பட்ட கடிதங்களில் மிகவும் அத்தியா வசியமானவற்றிற்கு அவர் கையொப்பம் இட்டார். மானேஜர் விடை பெற்றவுடன், உள்ளே அடியெடுத்து வைத்தாள் குமாரி குயில்மொழி. சரிந்து விழுந்த நைலக்ஸ் புடைவையை இழுத்துப் போட்டுக்கொண்டாள். முதலாளி தன்னே ஜாடையாகப் பார்ப்பதை உணர்ந்ததும், நாணப் புன்னகைப் பூக்களே மொட்டவிழ்த்துத் தன்னுடைய சிவந்த இதழ்களிலே தூவிவிட்டபடி, கொணர்ந்திருந்த அந்தத் தனிப் பார்வைக் கடிதத்தை மரியாதை மண்டிய பவ்யத் துடன் உரியவரிடத்திலே சேர்ப்பித்தாள். சடுதியில் அங்கிருந்து நகர்ந்தாள். ஊதுவத்தியின் நறுமணம் மிதந்தது. இப்போது, செந்தில் நாயகம் தனித்து இருந்தார். ஆகவே, தனிப் பார்வைக்கெனக் காத்திருந்த அந்தக்