பக்கம்:விதியின் யாமினி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சந்தோஷமும் இப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தி விட்டு ஒடிவிட்டன. அவர் தவித்தார். கணங்கள் ஊர்ந்தன. - செந்தில்நாயகம் மாடிப்படிகளே எதிர்பார்த்து கின்ருர். அதோ யாமினி ... விழிமறுகி, ஜாடையாகப் பார்த்தார் அவர். விழிகள் கலங்கின : அவள் வந்தாள். கைகூப்பிக்கொண்டே வந்து நின் ருள். சோகமே வடிவாகி வந்து கின்ருள். அவளது அந்த 'மஞ்சள் தாலி அவளுடைய மார்பகத்தில் வெளிப்படையாகத் தவழ்ந்து கிடந்தது அவள் அழகு அப்படியே இருந்தது. நெற்றிப் பொட்டு துல்லிதமாய் விளங்கியது. சுருண்ட கரை முடிகள் ஒன்றிரண்டு கன்னங்களே வருடின ! ... ஆம் அவள் யாமினி ! அவள்தான் யாமினி !