பக்கம்:விதியின் யாமினி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 0 சட்டைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து உதறி ர்ை. எஞ்சியிருந்த சிகரெட் பற்றி எரிந்தது. புகைந்தது. புகையை வெறியுடன் இழுத்து இழுத்து ஊதினர். இனி. அவரால் அக்கடிதத்தை-யாமினியின் அந்தக் கடிதத்தைப் படிக்க முடியுமோ ?-படித்தார். பூரீ செந்தில் நாயகத்திற்கு, இதற்குள் என்னே நீங்கள் மறந்திருக்க மாட்டீர்களென்றே கருதுகிறேன். ஏனென்ருல், நான் தங்களே இதுவரை மறக்க வில்லே. என் உயிர் உள்ளவும் மறக்கவும் முடியாது ! இத்தகைய ஒரு நிலேக்கு-முடிவுக்கு உகந்த பெருமை’ உங்களேயே சாரும். காலம், நாட்களுடன் ஒடிப் பிடித்து விளையாட, நீங்கள் மகிழ்ச்சியுடன் ஒடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் பொன் மயமான நேரமாக இது இருக்கும் அப்படித்தான் இருக்கவும் வேண்டும், உங்களுக்கு - ஆளுல் என் கிலே...என் முடிவு...என் கதி-இவற்றைப் பற்றி நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கப் போகிறீர்கள் : அப் படிப் பார்க்கும் பக்குவம் இருந்திருந்தால், நீங்கள் என்னுடைய 'விதி'யாக ஆகி, வினே'யாக மாறி விளேயாடியிருப்பீர்களா ? தெய்வம் கொடுத்த இந்த நெஞ்சத்தில் தான் தெய்வமும் உறைகிறது! - ஆனல் உங்கள் இதயம்....? திரும்பத் திரும்ப இத்தனே காலமும் நான் உங்களுக்குத் தவருமல் இம்மாதிரி கடிதங்கள் அனுப்பி வருகிறேன். என் கடிதங்களைப் படிக்கும் நேரங்களிலாவது, என்னைப் பற்றி நினைத்து, எனக்காக அனுதாபம் கொள்ள உங்களுக்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது ? உங்களுடைய 'திரு விளேயாடல்’ களுக்கேதாம் உங்கட்கு நேரம் போதாதே 1. காலேஜ் நாட்களிலே நீங்கள் விவாதம் செய்தீர்கள், விதி என்பது மனிதனே வலியச் சுமந்து கொண்ட ஒரு சுமை-ஏதோ ஒரு சுமை!...' என்று