பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 என்றால் , புதர்களுக்குள் ஒடி ஒளிவதற்குக் கால்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டாமா?

முயல்கள் எல்லாம் பொந்துகளுக்குள் ஓடி ஒளிய ஆரம்பித்தன.

குவித்து வைத்திருந்த கற்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருந்த ராகிக்கு சிறிது சிறிதாகத் தன்னம்பிக்கை ஏற்பட்டது. ஒரு பாம்பைப் பிடிப்பதற்கா அவர்கள் இவ்வளவு தூரம் வந்திருப்பார்கள் ? என்று நினைத்துப் பார்த்தது. அப்போது கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது.

ராகி இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு கீரி வந்துசேர்ந்தது. இப்போது உண்மையிலே ஆபத்துத்தான்! தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ராகி ஒரு நொடியில் தயாராகிவிட்டது. அதற்கு இப்போது மிகுந்த பயம். தன்னை அறியாமலே அது படம் எடுத்து, ‘உஸ், உஸ்’ என்று சீறி நஞ்சைக் கக்கியது. தந்திரமாகவும் ஆவேசத் துடனும் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டது. ஆனாலும், மிகுந்த சுறுசுறுப்பும்,

8