பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ஒரு தாவுத் தாவியது. இதற்குள் ராகி, ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று அங்கிருந்து வெகு வேகமாக நழுவிவிட்டது!

ராகி நன்றாகத் தூங்கியது. எத்தகைய ஆபத்துக் களையெல்லாம் கடந்துவந்தது? கொஞ்சம் ஓய்வு வேண்டாமா? விழித்து எழுந்தவுடன், ருசியான ஒரு தவளை அல்லது ஒர் அணிலைப் பிடித்துத் தின்ன வேண்டுமென்று நினைத்தது. உடம்பை நன்றாக நீட்டியது. இரைதேடப் புறப்பட்டது.