பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வழியிலே அது ஒர் உருவத்தைப் பார்த்தது. உடனே பசியை மறந்துவிட்டது. அதன் கண்களிலே பிரகாசம் தோன்றியது. அதற்குக் காரணம், அது பார்த்தது ஒரு பெண் நாகப் பாம்பு! அது மாதிரி ஓர் அழகான பாம்பை அதற்கு முன் அது பார்த்ததே இல்லை.

உடனே நேராக அதனிடம் சென்றது. அதனுடன் சேர்ந்து நடனம் ஆடத் தொடங்கியது. ஆடியது ஆடியது,