பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கிராமத்து மக்களெல்லாம் பாம்பு நாட்டியத்தைப் பார்க்க வந்துவிட்டார்கள். ஆனாலும், ராகி கவலைப்படவில்லை. நாட்டியம் ஆடிக்கொண்டே யிருந்தது. அப்போது ஒரு குறும்புக்காரச் சிறுவன் ஒரு கல்லை எடுத்து அவைகளைக் குறி பார்த்து எறிந்தான். ராகிக்கு அது தெரியவே தெரியாது.