பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாதிரியாக இருந்தது. உடம்பை வளைத்து, நெளித்து அங்கே படுத்தது; அப்படியே தூங்கிப் போய்விட்டது.

காலையில் எழுந்தது. தனக்கு மேலே ஒரு கூடை இருப்பதை அறிந்தது. வெளியே போவதற்கு முண்டியடித்துப் பார்த்தது முடியவில்லை. அப்போது யாரோ, “நாம் ஒரு நாகப் பாம்பைப் பிடித்துவிட்டோம்! பிடித்துவிட்டோம் !” என்று கத்துவது கேட்டது.

“நான் ஒரு முட்டாள். கோழிக் குஞ்சு போல அகப் பட்டுக்கொண்டு விட்டேனே!” என்று நினைத்தது ராகி. ஆனாலும், அதற்கு யார் உதவுவார்கள்? கூடையை விட்டு அதனால் வெளியில் வர முடிய வில்லை. வெற்றி முழக்கத்துடன், அதை அந்த ஊரில் உள்ள பாம்பாட்டி வீட்டிற்குக் கொண்டு சென்றார்கள்.

பாம்பாட்டி கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் ராகியின் விஷப் பற்கள் இரண்டையும் பிடுங்கி விட்டான்.