பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறாமைப்படும். மலைப்பாம்புக்கு அடுத்தபடி மிகவும் பருமனாக இருந்தது ராகிதான். அதனுடைய நீளம் ஓர் ஆள் அளவு இருக்கும். அதன் தோல் அழகாக, மங்கலான சிவப்பு நிறத்தில் இருந்தது. தோலின் மேல் கறுப்பு வெள்ளைக் கோடுகள் கலந்து இருந்தன.

ராகிக்கு கர்வம் அதிகம். எல்லாப் பாம்புகளையும் விட தான்தான் பெரியவன் என்ற எண்ணம். அதனால், அது மற்ற பாம்புகளுடன் சேருவதில்லை. தனியாகவே வசித்து வந்தது. பாழடைந்த ஒரு கோயில் சுவரிலே ஒரு பொந்து இருந்தது. அதுதான் அதனுடைய வீடு.