பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கால்களின் அடியிலே சிக்கி நசுங்கின; சருகுகள் ‘சரசர’ என்று நொறுங்கின.

‘யானைகள்தான்’ என்று கூறிக்கொண்டே மெதுவாக ஒரு கல்லின் அடியிலே ராகி புகுந்தது. அங்கு ஒளிந்துகொண்டே சத்தம் வந்த திசையைப் பார்த்தது. காட்டிலிருந்து பெரிய யானைக் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருந்தது. ராகியைக் கடந்து யானைகள் போகும் போது அவற்றின் கால்களை அது நன்றாகப் பார்த்தது. அந்தக் கால்கள் தூண்களைப் போல் இருந்தன ; கன்னங்கரேல் என்றிருந்தன.