பக்கம்:வித்தைப் பாம்பு.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிறிது நேரத்தில், அவர்கள் ராகியைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ராகி திடுக்கிட்டது.

நாம் ஒளிந்திருக்கும் இந்தக் கல் நாயிடமிருந்து நம்மைக் காப்பாற்றாது' என்று ராகி உணர்ந்தது. உடனே ஆச்சரியத் தாலும், பயத்தாலும் ‘உஸ்ஸ்...’ என்று பலமாக ஓசை எழுப் பியது.

“அதோ, நல்ல பாம்பு! நல்ல பாம்பு!!” என்று ஒருவன் கத்தினான்.

ஆனல், அதற்குள் ராகி புதர்களுக்கு இடையிலே புகுந்து மறைந்துவிட்டது.

எவ்வளவு வேகமாக ஊர்ந்து செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக ராகி சென்றது. மூச்சுத் திணறியதால் ஓரிடத்தில், புற்களுக்கு அடியிலே நின்றது. அப்போது அந்தக் காடு முழுவதுமே திடீரென்று பயத்தால் நடுங்குவது போல அதற்குத் தோன்றியது.