பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலைக்காரி விசாலம்

213


‘என்னமோ, ஏதோ' என்ற பீதியுடன் அவர் மனைவி மனோன்மணி ஓடோடியும் வந்தாள்.

அவளைப் பார்த்ததும், சுகாசனத்தில் நிமிர்ந்த படி உட்கார்ந்திருந்த ராமேஸ்வரன், "வந்துட்டாண்டி!" என்று சொல்லிக் கொண்டே பின்னால் ‘தொப்' பென்று சாய்ந்தார்.

"யார் வந்துட்டாண்டி?" என்று பதட்டத்துடன் கேட்டாள் மனோன்மணி.

"நம்முடைய கம்பெனிக்கு ஒரு அக்கெளண்டெண்ட் தேவை என்று பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தேனோ இல்லையோ, அதற்கு ஒரு அப்ளிகேஷன் வந்தது. ஆசாமியை நேரில் வரச் சொல்லி கடிதம் எழுதச் சொன்னேன்; வந்தான். பார்த்தால் அவனே அந்த ஆசாமி!”

“ஐயோ! அவன், இவன் என்று சொல்லி ஏன் என் பிராண்ணை வாங்குகிறீர்? ஆசாமி யார் என்று சொல்லித் தொலையுங்களேன்!" என்று தலையில் அடித்துக்கொண்டு கேட்டாள் மனோன்மணி.

"போடி, போ! உனக்குத்தான் எல்லாம் தெரிந்த கதையாச்சே! பர்மாவிலிருந்து எவனுடைய பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து இங்கே நாம் இவ்வளவு அமர்க்களமாயிருக்கிறோமோ, அந்தப் பணத்துக்குச் சொந்தக்காரன் என்னிடம் அக்கெளண்டெண்ட் வேலை பார்க்க வந்திருக்கிறான்!” என்றார் ராமேஸ்வரன்.

"நான் அப்பொழுதே சொல்லவில்லையா? எங்கேயாவது அவர் இன்னும் உயிரோடு இருந்தாலும் இருப்பார் என்று. நீங்கள்தான் அந்த மனுஷர் செத்தே போயிருப்பார் என்று ஒரேயடியாய்ச் சாதித்தீர்கள்!”

"நான் என்னத்தைக் கண்டேன்? நாம் வரும் போது நம் கண் முன்னாலேயே எத்தனையோ பேர் சாகவில்லையா? அத்தனை பேரில் அவனும் ஒருவனாயிருப்பான் என்று நான் நினைத்தேன். கடைசியில் என்னடா என்றால்....." என்று சொல்லிக் கொண்டே ராமேஸ்வரன்தம் முகவாய்க்கட்டையை அப்படியும் இப்படியுமாகத் தடவி விட்டுக் கொண்டார்.

"கடைசியில் என்னதான் ஆச்சு?”

"என்ன ஆவது? குற்றத்தை ஒப்புக் கொண்டேன். எல்லாம் உம்முடைய பணந்தான், சந்தர்ப்பம் உம்மிடம் பணத்தை ஒப்புவிக்க