அன்றொரு நாள் மாடி அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்து, நான் மெளனம் சாதித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முன்பின் தெரியாத பெண் எனக்கு முன்னால் தோன்றி விம்மி விம்மி அழுதாள்.
நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன்.
அவள் அழுகையை நடுவே அடக்கிக் கொண்டு, "சிவபாதம் பிள்ளையின் புதல்வர் நீங்கள்தானே?" என்று கேட்டாள்.
“ஆமாம்."
"உங்கள் பெயர்?”
"சஞ்சீவி."
"தயவு செய்து எனக்கொரு உதவி செய்ய வேணும்..."
“என்ன உதவி?”
"என் அண்ணாவை உங்களுக்குத் தெரியுமோ?”
"தெரியாதே"
“சமீபத்தில் வங்காளப் பஞ்ச நிவாரணத்துக்காக இந்தப் பக்கம் நிதி திரட்டிக் கொண்டிருந்தாரே, அவரை உங்களுக்குத் தெரியாதா?”
"யார் அது கிருபாநிதியா?”
“ஆமாம், அவர்தான் என் அண்ணா!"
“ஓஹோ அவரைப் பற்றி இப்பொழுது என்ன?”
“அவர் ஒரு தவறான காரியம் செய்துவிட்டார்....”
“என்ன காரியம்"
"ஒரு நாள் உங்கள் அப்பாவிடம் வந்து அவர் வங்கநிதிக்காக உதவி கோரினார்..."
“ஆமாம் அதில் என்ன தவறு?”
"அதில் ஒன்றும் தவறில்லை. அதற்குப் பிறகுதான் என் அண்ணா தவறு பண்ணிவிட்டார்"
"என்ன தவறு?’’