418
விந்தன் கதைகள்
"ஏன், உனக்கு இந்த ஊர் இல்லையா?” என்று கேட்டாள் அவள்.
"இல்லை, எனக்கு இளிச்சவாயன் பட்டி?”
“இங்கே எதற்கு வந்தாய்?"
"அந்த வெட்கக் கேட்டை ஏன் கேட்கறீங்க, எனக்கு ஸினிமா ஸ்டார்ஜில்ஜில் சுந்தரியைக் கண்ணாலம் பண்ணிக்கணும்னு ஆசை;"
"ம்......"
"அதுக்காக நான் பணம் சேர்க்கிறதுக்குள்ள அவளுக்கு வயசாயிப் போச்சு!"
"ம்........ "
"அடுத்தாற்போல் புல்புல் தாராவைக் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்"
"ம்.........."
"அவளுக்கும் வயாசியிப்போச்சி!"
"அடபாவமே, அவர்களுக்கு வயசாக ஆக உனக்கு மட்டும் வயசு குறைந்து கொண்டே வந்ததாக்கும்?" என்றான் முரளி குறுக்கிட்டு.
"ரொம்ப அழகாத்தான் இருக்கு! இப்படிப்பட்டவர்களுடைய அறியாமைக்காக நாம் அழுவதா, சிரிப்பதா? வாயை மூடிக் கொண்டு பேசாமலிருங்கள்!" என்றாள் சரளா.
"இதோ மூடிக் கொண்டுவிட்டேன்"என்று அவன் உடனேதன் வாயை மூடிக் கொண்டு விட்டான்.
"ம், அப்புறம்......?”
"கடைசியா குமாரி குலோப்ஜானையாச்சும் கண்ணாலம் பண்ணிக்கலாம்னு நெனைச்சி, அவளுக்கு ஒரு கடிதாசி எழுதிப் போட்டேன்!"
"ம்......."
"அதுக்கு வேண்டிய பணத்தை எடுத்துகிட்டு அடுத்த நாளே வரும்படி அவ குமாஸ்தா பதில் எழுதியிருந்தான்!”
"ம்........."