பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதவி

455

சிறிது நேரத்துக்குப் பிறகு 'கம்போஸிங் செக்ஷ'னுக்குள் நுழைந்த கதிர்வேலுவை, 'வாடா, வா!' என்று வழக்கம்போல் 'டா' போட்டு வர வேற்று, "இவ்வளவு நேரமாகவா முதலாளியும் நீயும் பேசிக்கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டான் கோவிந்தசாமி.

அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, காதோரத்தில் செருகி வைத்திருந்த பென்சிலை எடுத்தான் கதிர்வேலு.

அதற்குள் ஒரு காகிதத்தை எடுத்துப் படு பவ்வியமாக அவனிடம் நீட்டினான் அருணாசலம். அதை வாங்கி, '1, அருணசலம்' என்று எழுதினான் அவன்!

"பிள்ளையார் சுழிக்குப் பதிலாக அவனுடைய பெயரை எழுதவே எழுதினாய்; குறைந்த பட்சம் மூன்று குட்டும், மூன்று தட்டும், மூன்று தோப்புக் கரணமுமாவது போட்டுவிட்டு எழுதக் கூடாதா?" என்றான் ஆரோக்கியசாமி.

"மறந்து விட்டிருப்பான்!" என்றான் பீதாம்பரம்.

"அப்பொழுதே ஞாபகப்படுத்தி யிருக்க வேண்டும்" என்றான் ஏகாம்பரம்.

அவர்கள் அனைவரையும் சேர்ந்தாற்போல் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, '2. குமாரசாமி, 3. முத்தையா, 4. நாராயணன், 5. பஞ்சாட்சரம்' என்று எழுதி, "இந்தாப்பா அருணாசலம், இதை எடுத்துக்கொண்டு போய் முதலாளியிடம் கொடுத்துவிடு; ‘ஆறாவது பெயரைக்காணோமே?' என்று கேட்டால், 'ஐந்து பேரே போதுமாம்!' என்று சொல்லிவிடு!" என்றான் கதிர்வேலு.

"சரி, ஸார்!" என்று அதை வாங்கிக்கொண்டு சிட்டாய்ப் பறந்த அருணாசலம், 'தொலைந்தான்; இனி கதிர்வேலு தொலைந்தான்! ‘எல்லோருக்கும் வேண்டியவர்' என்பதற்காகத்தானே அவருக்குப் போர்மேன் பதவி? இப்போதோ, அவர் யாருக்கும் வேண்டாதவராகி விட்டார். இனி, நான் 'எல்லோருக்கும் வேண்டியவனாவதற்கு வழி வகைகளைத் தேட வேண்டும் வெற்றி, எனக்கே வெற்றி!' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அதற்குள் விஷயத்தை ஒருவாறு புரிந்து கொண்ட ஆரோக்கிய சாமி, "நாங்கள்?" என்று ஒரு கேள்வியைப் போட்டு விட்டு, கதிர்வேலுவின் முகத்தை ஊடுருவிப் பார்த்தான்.