பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் ஒன்பாற் சுவையார்

463

"இன்னும் இரண்டு வைக்கட்டுமா?"

"வை வை! போதுமென்ற மனம் மனிதனுக்கு எப்போதாவது இருக்குமென்றால், அது எதையாவது தின்னும்போதுதான் இருக்கும் என்பார்கள்; அதுவுமன்றோ இந்நாள் வரை இல்லாமலிருந்தது எமக்கு? வை, வை! இன்னும் நான்கே வேண்டுமானாலும் வை!"

அடுத்தாற்போல் என்றும் இல்லாத திருநாளாக அன்னாருக்கு வெற்றிலையை மடித்துக் கொடுத்துக் கொண்டே, "எனக்கு இரண்டு பவுன்களில் இரண்டு வளையல்கள்!" என்று ஆரம்பித்தாள் சதி, செக்கை ஒரு, கண்ணாலும், செக்குக்கு உரியவரை இன்னொரு கண்ணாலும் பார்த்துக்கொண்டே.

"ம்........" என்றார் பதி.

"குழந்தைக்கு ஒரு பவுனில் ஒரு சங்கிலி"

"ம்........"

"எங்கேயாவது போகும்போதாவது கட்டிக் கொள்ள எனக்கு ஒரு பட்டுப் புடவை!"

"ம்......."

"அப்புறம், அப்புறம்........"

"யாம் சொல்கிறோம்-எம்முடைய கழுத்துக்கு ஒரு ‘மைனர் செயின்'; கைக்கு இரண்டு கல் இழைத்த மோதிரம்; வெள்ளி வெற்றிலைப் பெட்டி ஒன்று; அதை எடுத்துக்கொண்டு எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்க ஓர் உருப்படாத சீடன்; ஸில்க் ஜிப்பா; ஸெண்ட்-இத்யாதி, இத்யாதி!"

"இந்த முன் பணத்துக்குப் பிறகு பின் பணம் வரும்போது........" என்று மீண்டும் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் பத்தினி.

"அந்தப் பின் பணத்தை என்ன செய்வது என்பதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்வோம்!" என்று செக்கை எடுத்து மடித்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு கிளம்பினார் அவர்.

"எங்கே, பாங்குக்கா?" என்று அவசர அவசரமாகக் கேட்டாள் அவள்.

"இந்த நேரத்தில் பாங்க் எங்கே இருக்கப் போகிறது? வேறு யாரிடமாவது கொடுத்துத்தான் இதைப் பணமாக்கிக் கொள்ள