பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

விந்தன் கதைகள்

"அதெல்லாம் ஒன்றும் கிடையாது; பகவத் கீதை படிக்காமலே, பலனை எதிர்பாராமல் கருமம் செய்கிறவர்கள் அவர்கள்!"

"அப்படியானால் ஒருநாள் இருபத்துநாலு மணி நேரமும் அல்லவா அவர்கள் உங்களுடன் இருந்தாக வேண்டியிருக்கும்?"

"ஆமாம்; ஒரு கணங்கூட அவர்கள் என்னை விட்டுப் பிரிவது கிடையாது!"

"அப்படி யிருந்துமா அவர்களை நான் இதுவரை பார்க்கவில்லை ?"

"உமக்குக் கண் தெரிந்தால்தானே பார்ப்பதற்கு?"

"அதனாலென்ன, அவ்வளவு அருமையான குழந்தைகளை நான் தடவிப் பார்த்தாவது உச்சி முகரக் கூடாதா? எங்கே, அவர்களைக் கொஞ்சம் அருகே வரச் சொல்லுங்கள்?"

"இதோ, அவர்கள் உங்களுக்கு அருகிலேயே இருக்கிறார்கள்; தடவிப் பாருங்கள்!" என்றார் சின்னண்ணா, தம்முடைய பேரப் பிள்ளைகளை அவருக்கு அருகே தள்ளி.

ஆவலுடன் அவர்களைத் தடவிப் பார்த்த பெரியண்ணா , கண்களில் நிர்துளிர்க்கச் சொன்னார்:

"ஆஹா! மூக்குக் கண்ணாடியையும் கைத் தடியையுமே பேரப் பிள்ளைகளாகக் கொண்டு விட்ட நீங்கள்தான் எவ்வளவு பெரிய பாக்கியசாலி!"