பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாளை நம்முடையதே

515

தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது வைகுந்தனுக்கு? மறுகணம் "இன்று கந்தையாவுடையதாகல்லவா இருக்கிறது!" என்றான் வியப்புடன்.

அவ்வளவுதான்; அவன் சொன்ன இது என்ன இது என்று புரிந்து விட்டது அவர்களுக்கு!

கைலாசம் கேட்டான்?

"இன்று அவர்களுடையதாயிருக்கும்போது நமக்கு மட்டும் ஏன் நாளை நம்முடையதாயிருக்க வேண்டும்?"

"கூடாது நண்பா, கூடாது நாளை அவர்களுடையதாயிருக்கட்டும்; இன்றை நாம் நம்முடையதாக்கிக் கொள்வோம்!”

இந்த உறுதி மொழியைக் கேட்டதுதான் தாமதம்; இருளடைந்து கிடந்த அந்தச் சிறுமியின் கண்களில்கூட ஒளி வீசியது.