பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து....

591

"புகைப்படக்காரரைக் கையோடு அழைத்துக் கொண்டு வரவேண்டாமோ? அந்த அபூர்வமான காட்சியை அந்த அருமையான காட்சியை அப்படியே படம் எடுத்துவிட வேண்டாமோ?" என்றார் அவர்.

"எந்த அருமையான காட்சியை?" என்றேன் நான்.

'தமிழுக்காக, தமிழ் அன்னைக்காக அந்தத் தமிழ் இளவல் தன் இன்னுயிர் நீக்கும் காட்சியைத்தான்' என்றார் அவர் பரவசத்துடன்.

அதற்குமேல் அங்கே நிற்க ‘என் வயிற்றெரிச்சல்' எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஏனெனில் தமிழ்மாறனைப் போன்றவர்கள் 'வெறி'க்கு வேலை கொடுத்தால், தமிழ்ப்புயல் தயாநிதியைப் போன்றவர்கள் எப்போதுமே 'அறிவு'க்கு வேலை கொடுப்பவர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே 'உங்கள் தலையிலே இடி விழ!' என்று நான் அவருக்குத் தெரியாமல் அவரை ஆசீர்வதித்துக் கொண்டே, 'அந்த அப்பாவிப் பைய'னின் வீட்டை நோக்கி - அந்த 'அனுதாபத்துக்குரிய 'வனின் வீட்டை நோக்கிக் காற்றாய்ப் பறந்தேன்!

26 ஜனவரி 1965

"தமிழ் வாழ்க, தமிழ்த் தாய் வாழ்க! தமிழ் வாழ்க, தமிழ்த் தாய் வாழ்க!"....

இப்படி ஒரு குரல் - ஆம், ஒரே ஒரு குரல்தான் - அவன் வீட்டை நான் நெருங்க நெருங்க அதுவும் என்னை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது.

ஒருவேளை அவன் குரலாயிருக்குமோ? - இதை நினைக்கும்போதே நெஞ்சில் திக்கென்றது எனக்கு!

இன்னும் வேகமாக சைக்கிளை மிதித்தேன்; அதே வேகத்தில் அந்தக் குரலும் என்னை நோக்கி விரைந்து வந்தது.

"தமிழ் வாழ்க; தமிழ்த் தாய் வாழ்க!" "தமிழ் வாழ்க! தமிழ்த் தாய் வாழ்க!"

சந்தேகமில்லை; அதே குரல்தான்!

ஆனால், அது தீனக் குரலாயுமில்லை; ஈனக் குரலாயுமில்லை . தமிழின் கம்பீரத்தைப் போலவே அதுவும் கம்பீரமாயிருந்தது!

எங்கிருந்து வருகிறது, அது?

இந்தக் கேள்வியை நான் எழுப்புவதற்குள் "அதோ பாரும்!" என்றொருகுரல் எனக்குப் பின்னாலிருந்து வந்தது. திரும்பிப்