பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்

609

"பயந்து போனாளா, ராஜகுமாரி....?"

"இல்லை புலி, சிங்கமா பயப்பட? குதிரைதானே!" என்று ‘விடுவிடு என் முந்தானையை விடு!' என்று தன் முன்தானையைப் பிடித்து இழுத்தாளாம் அவள். அதுவோ, 'விடமாட்டேன், விடமாட்டேன்' என்பதுபோல் தலையைத் தலையை ஆட்டிற்றாம். 'இதென்ன வம்பு?' என்று ராஜகுமாரி தன் தோழியைப் பார்க்க, அவள் சிரித்துக் கொண்டே, 'குதிரை ராஜா, குதிரை ராஜா! பொன்னான முந்தானையை விட்டுவிடு; இந்தப் பெண்ணை உனக்கே கல்யாணம் செய்து கொடுக்கிறேன்!' என்றாளாம் வேடிக்கையாக. அவ்வளவுதான்; குதிரை அவளுடைய முந்தானையை விட்டு விட்டு, 'கக்கக்கக்கா' என்ற ஒரு கனைப்புக் கனைத்ததாம்....!"

"மனிதனா சிரிப்பதற்கு? குதிரையாயிருக்கவே கனைத்த தாக்கும்! அப்புறம்.....?"

"தப்பினோம், பிழைத்தோம் என்று அரண்மனைக்கு வந்து சேர்ந்தாளாம் ராஜகுமாரி. அன்றிலிருந்து அந்தச் சமர்த்துக் குதிரை என்ன செய்ததாம், தெரியுமா? - கொள்ளும் தின்னாமல், புல்லும் தின்னாமல் எப்பொழுது பார்த்தாலும் ஒரே ஏக்கமாயிருந்ததாம்...."

"ஏக்கமா! அது என்ன ஏக்கம் பாட்டி, அப்படிப்பட்ட ஏக்கம்...?"

"அதுதான் தெரியவில்லை, ராஜாவுக்கு! ஒரு வேளை கூண்டில் அடைத்து வைத்திருப்பதால் அப்படி இருக்கிறதோ, என்னமோ என்று அதை உடனே அவன் திறந்து விடச் சொன்னானம். அப்போது தான் எதிர்பார்த்தபடி அது வெளியே பறந்து போகாமல் ராஜகுமாரிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு அவள் முந்தானையைக் கவ்விக் கவ்வி இழுத்ததாம். ஒன்றும் புரியாத ராஜா, 'என்ன விஷயம்?' என்று கேட்க, தோழி நடந்ததைச் சொன்னாளாம். 'அப்படியா சமாசாரம்?' என்று அந்த அசட்டு ராஜா, தன் அருமை மகளைத் தன்னுடைய ஆசைக்குதிரைக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டானாம்......!"

"அட, பாவி! அழவில்லையா ராஜகுமாரி...?"

"அழாமல் சிரிப்பாளா என்ன? அழுதாளாம், அழுதாளாம், அப்படி அழுதாளாம் அவள்! ஒரு நாள் குறிசொல்ல வந்த குறத்தி ஒருத்தி, 'ஏன் அழுகிறாய், பெண்ணே ?' என்று அவளைக் கேட்க, விஷயத்தைச் சொன்னாளாம் ராஜகுமாரி. 'அப்படியா சமாசாரம்? அதற்காக நீ அழாதே! நான் சொல்கிறபடி செய்; எல்லாம் சரியாய்ப்

வி.க. -39