பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

618

விந்தன் கதைகள்


தான் தங்க விரும்பிய ஓட்டலை அடைந்ததும் அரசு நாலணாவை எடுத்து, "இந்தா, இதை வைத்துக்கொள்!" என்றான், பெருமாளிடம்.

அவ்வளவுதான்; "வெச்சிக்கோ , நீயே வெச்சிக்கோ!" என்று எடுக்கும்போதே ஏக வசனத்தில் ஆரம்பித்தான் பெருமாள்.

"ரொம்ப தாங்ஸ்!" என்று சொல்லிக்கொண்டே, எடுத்த நாலணாவை மறுபடியும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான் அரசு.

"இதுக்குத்தான் கோட்டு, கீட்டெல்லாம் போட்டு கிட்டு வந்தியா?" என்று பெருமாள் தன் 'விஸ்வரூபத்தை எடுத்தான்.

"எதற்கு?" என்று கேட்டான் அரசு.

"எதுக்கா, கூலிக்காரனை ஏமாத்தறதுக்கு!"

"நானா உன்னை ஏமாற்றப் பார்க்கிறேன்? நீதான் என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்!"

"ஐயோ பாவம், பச்சைக் கொழந்தை இவரு! வாயிலே வெரலை வெச்சாக்கூடக் கடிக்கத் தெரியாது போல இருக்கு? வேணும்னா வெச்சிப் பார்க்கட்டுமா?" என்று பெருமாள் அவன் வாய்க்குள் விரலை வைக்கப் போனான்.

"ஏய், எட்டி நில்!" என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளினான் அரசு.

பெருமாள் தட்டுத் தடுமாறி நின்று, "வ!!, வஸ்தாத்! ஓட்டல்லே கூட்டம், பக்கத்திலே போனு எல்லாம் இரும் தன்னு பார்க்கிறியா? நம்மகிட்ட அதெல்லாம் ஒண்ணும் நடக்காது, நைனா வர்றியா, ஒண்டிக்கு ஒண்டி இடிச்சுக்கு வோம்?" என்று தன் தோள்களை மாறி மாறித் தட்டிக் காட்டினான்.

"போடா, பொறுக்கி! பட்டணத்துக்கு என்னைப் புதியவன் என்று நினைத்துக்கொண்டு விட்டாயா? இதற்கு முன்னாலேயே உன்னைப்போல் எத்தனையோ பொறுக்கிகளை நான் இங்கே பார்த்திருக்கிறேன்!"

"பார்த்திருப்பே, பார்த்திருப்பே! பார்க்காமலா நாலணா பிச்சைக் காசை எடுத்து எங்கிட்டே... குடுக்க வர்றே?"

கூலி போதாது என்றால் கேள்; கொடுக்கிறேன்; அதை விட்டு விட்டு ஏன் மரியாதையில்லாமல் பேசுகிறாய்?" என்று