பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/306

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

624

விந்தன் கதைகள்

எது எப்படி யிருந்தாலும் தான் இந்தச் சமயத்தில் இப்படிப் படுத்திருக்கக் கூடாதுதான் -ஆனால் அதற்கு நானா பொறுப்பு? எல்லாம் வல்ல இறைவனின் சித்தம் அப்படியிருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

ஒன்று வேண்டுமானால் செய்யலாம் - அதாவது, இவர்களுடைய ஏச்சும் பேச்சும் காதில் விழாமல் இருப்பதற்காகத் தீபாவளிக்கு முன்னால் தன் உயிரைத் தானே வேண்டுமானால் மாய்த்துக்கொண்டு விடலாம்- கையில் வைர மோதிரம் அணிந்திருக்கும் தனக்கு அது ஒரு பெரிய காரியமும் இல்லை .......

இந்த எண்ணம் உதித்ததும் ஒளியிழந்த கண்களால் ஒளி மிக்க வைரமோதிரத்தைப் பார்த்தார் பெரியவர்-'உன்னை நீர் மாய்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக என்னை நீ ஏன் மாய்க்கப் பார்க்கிறாய்? நான் இருந்தால் உனக்குப் பின்னால் உன் மகனுக்கு உதவ மாட்டேனா? என்று அது தன்னைப் பார்த்துக் கேட்பதுபோல் இருந்தது அவருக்கு-ஆம், எனக்குச் சில சமயம் உதவியது போல் நீ அவனுக்கும் உதவத்தான் வேண்டும் - மாட்டேன்; வாழ்வுக்குப் பயன்படுத்திக்கொண்ட உன்னைச்சாவுக்கும் பயன் படுத்திக்கொள்ள மாட்டேன்!

வேறு வழி?.......

விட்டத்தைப் பார்த்தார்; விட்டத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் கயிற்றையும் பார்த்தார் - இரண்டையும் பயன்படுத்தித் தன் வாழ்வை முடித்துக் கொள்வதென்பது அவ்வளவு இலேசா, என்ன? அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்து முடிப்பதற்குள் யாராவது எழுந்து விட்டால்? வீட்டில் உள்ளவர்களோடு வீதியில் உள்ளவர்களும் சேர்ந்து விடுவார்கள். அதற்குப் பிறகு போலீஸ், விசாரனை என்றெல்லாம் ஏற்பட்டு, அதனால் தன் மகன் ஏன் அனாவசியமான தொல்லைகளுக்கு உள்ளாக வேண்டும்? - கூடாது; தன் மகன் தன்னால் எந்தவிதமான தொல்லைக்கும் உள்ளாகக் கூடாது!

தொட்டதும் உயிர் சட்டென்று போய்விட ஏதாவது வழியிருந்தால்? - ஏன் இல்லை, மின்சாரத்தைத் தொட்டால் அப்படியே போய்விடும் என்கிறார்களே? -ஆம், அதுவே வழி; அதுவே சரியான வழி!

இந்த முடிவுக்கு வந்ததும், 'பொழுது எப்போது சாயும் இரவு அதை எப்போது தழுவும்?' என்று காத்துக்கொண்டிருந்தார் அவர்!

"அடே பாலு, இங்கே வாடா! அடி வசந்தி, இங்கே வாடி"-கடைக்குப் போய்விட்டு வந்த சம்பந்தியம்மாள் பெருங்