பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளைய பாரதத்தினன்

639

"இதை முடித்துக் கொண்டு நீ தபாலாபீசுக்குப் போகிறாயா?"

"ஆமாம் சார், அது முடிந்ததும் நேரே சைனா பஜாருக்குப் போய்விடுகிறேன்."

"எதற்கு?"

"கைக்குட்டை விற்க!"

"தேவலையே, ஒரே நாளில் இரண்டு வேலைகள் பார்ப்பதோடு ஒரு வியாபாரமும் செய்கிறாயே நீ?"

"எல்லாம் என் அப்பாவின் அருள்."

"உன் அப்பாவின் அருளா!"

"ஆமாம், சார்! அவர் என்னை மட்டும் பெற்று வைத்திருந்தால் எனக்குத் தபாற்காரன் வேலையே போதும்; எனக்குப் பின்னால் எட்டுப் பேரையல்லவா அவர் பெற்று வைத்திருக்கிறார்? அவர்களுக்கெல்லாம் தீனி போட வேண்டுமே சார், தீனி!" என்று சொல்லிக் கொண்டே அவன் சைக்கிளில் ஏறிப் பறந்தான். "வேடிக்கையான பையன்!" என்று சொல்லிக்கொண்டே அவர் பாப்பாத்தியின் பக்கம் திரும்பி, "உனக்குப் பணந்தானே வேண்டும், உன் பெண்ணுக்குப் பாவாடை, ஜாக்கெட் வாங்கிக் கொடுக்க? அப்படியே தருகிறேன். போ!", என்று சொல்லி அவளை அனுப்பி வைத்துவிட்டு எழுந்தார்.

'வருகிறேன், வருகிறேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருந்த தீபாவளி ஒருநாள் வந்தேவிட்டது. 'கங்கா ஸ்நானம்' முடிந்ததும் தம் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாடை வழங்கி மகிழ்ந்த ஆத்மநாதன், "வாடா, உனக்குத்தான் முதலில்!" என்று சமையற்காரனை அழைத்தார். வழக்கம்போல் தலையைச் சொறிந்து கொண்டே வந்து அவன் நின்றான். அவனிடம் ஒரு வேட்டியையும் ஒரு துண்டையும் எடுத்து அவர் கொடுக்க, அவன் அவற்றைப் பெற்றுக்கொண்டு அவரை வணங்க, அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

அடுத்தாற் போல் தோட்டக்காரன் தம்பதியரை அழைத்தார் அவர்.

அவர்களும் வழக்கம் போல் வந்து தலையைச் சொறிந்து கொண்டு நின்றனர். அவர்களிடம் வேட்டி, துண்டுடன் ஒரு புடவையையும் எடுத்து அவர் கொடுக்க, அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு அவரை வணங்க, அவர் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார்.

அவர்களுக்கு அடுத்தாற் போல் பாப்பாத்தியை அழைத்தார் அவர். அவளும் வழக்கம்போல் தலையைச் சொறிந்து கொண்டு வந்து