பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருடனுக்கு விடுதலை!

"ப்பா!" என்றான் பையன். "ஏண்டா, ராஜீ?" என்றார் அப்பா.

“பொங்கல் அப்பா....."

“பொங்கல்தானே?....... நாளைக்கு நம்ம வீட்டிலே பண்ணச் சொன்னால் போச்சு; உனக்கு சர்க்கரைப் பொங்கல் வேணுமா; சாதாப் பொங்கல் வேணுமா?"

"ஊ ஹும்..... அது இல்லேப்பா, பொங்கலுக்கு.... பொங்கலுக்கு....”

"ஒஹோ, பொங்கலுக்கா?....என்ன வேணும் உனக்கு?"

"புஷ்-கோட், அப்பா!"

"இவ்வளவுதானே? தைத்து விட்டால் போச்சு. எங்கே தங்கச்சி......?”

"இதோ, வந்துட்டேன்!”

'உனக்கு ஒன்னும் வேணாமாம்மா?"

"எனக்கா?...... எனக்கு....... எனக்குப் பட்டுப்பாவாடை, பட்டு ஜாக்கெட்டு, அப்பாலே....... அப்பாலே....... எனக்கு எல்லாம் வேணும்ப்பா!"

"சரி, உனக்கு வேணுங்கிறதெல்லாம் அந்த எல்லாங்கிறதுல அடங்கிப் போச்சு இல்லையா?” என்றார் அப்பா சிரித்துக் கொண்டே.

இந்தச் சமயத்தில் கடைக்குட்டி கல்யாணி எங்கிருந்தோ ஓடோடியும் வந்து, அப்பாவின் கால்களை தன் பிஞ்சுக் கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, "அப்பா, அப்பா, அப்ப்பா!" என்று வாய் ஓயாமல் அடித்துக் கொண்டாள்.

"என்னடா, கண்ணு?" என்றார்.அவர், அவளை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டே.

"எல்லோர் வீட்டுக்கும் பொங்கல் வரப்போகிறதாமே, அது நம்மவீட்டுக்கு வருமாப்பா? என்று ஒரு போடு போட்டாள் அவள்.