இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
மயில் ஆடிற்று; அவன் நம்பினான்.
"நாய் குரைக்கும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.
"மாட்டேன்; குரைத்தால்தான் நம்புவேன்!" என்றான் அவன்.
நாய் குரைத்தது; அவன் நம்பினான்.
"நரி ஊளையிடும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.
"மாட்டேன்; ஊளையிட்டால்தான் நம்புவேன்!" என்றான் அவன்.
நரி ஊளையிட்டது; அவன் நம்பினான்.
"சரி, பாம்பு கடிக்கும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.
"மாட்டேன்; கடித்தால்தான் நம்புவேன்!" என்றான் அவன்.
பாம்பு கடித்தது. ஆனால்..... பாவம், அதை நம்பத்தான் அவன் இல்லை!
荔,荔,荔