பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



106

மயில் ஆடிற்று; அவன் நம்பினான்.

"நாய் குரைக்கும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.

"மாட்டேன்; குரைத்தால்தான் நம்புவேன்!" என்றான் அவன்.

நாய் குரைத்தது; அவன் நம்பினான்.

"நரி ஊளையிடும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.

"மாட்டேன்; ஊளையிட்டால்தான் நம்புவேன்!" என்றான் அவன்.

நரி ஊளையிட்டது; அவன் நம்பினான்.

"சரி, பாம்பு கடிக்கும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.

"மாட்டேன்; கடித்தால்தான் நம்புவேன்!" என்றான் அவன்.

பாம்பு கடித்தது. ஆனால்..... பாவம், அதை நம்பத்தான் அவன் இல்லை!

荔,荔,荔