பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


"என்னை ஏன் கொட்டினாய்" தேள் சிரித்துக்கொண்டே சொல்லிற்று: "இல்லாவிட்டால் இந்த வீட்டில் நான் ஒருவன் இருக்கிறேன் என்பது எப்படித் தெரிவதாம்?"

號。%號

17. படைப்பின் விசித்திரம்

மடக்கி வைத்த காலுக்குக் கீழே மிருதங்கத்தை இடுக்கி வைத்துக்கொண்டு, வெளு, வெளு என்று வெளுத்துக்கொண்டிருந்தார் மிருதங்கக்காரர்.

"ஐயோ, பாவம்" என்றது பிடில்.

"ஏனாம்?" என்று கேட்டது கஞ்சிரா.

“என்னதானிருந்தாலும் இப்படியா அடிப்பார்கள், மிருதங்கத்தை?" என்றது அது.

"அடிக்காமல் தட்டியா கொடுப்பார்கள்?" என்றது இது.

"ஏன், என்னவர் என்னை மீட்டுவதுபோல் அதனவர் அதையும் மீட்டினால் என்னவாம்?" என்று தம்பூரா கேட்டது.

கஞ்சிரா பெருமூச்சுடன் சொல்லிற்று:

"உன்னை மீட்டினால் ஓசை கிளம்பிவிடுகிறது; என்னையும் மிருதங்கத்தையும் அடித்தால்தானே ஓசை கிளம்புகிறது!"

荔,荔,荔

கு.க-3