இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
இக்குறையை களைய ‘கலைஞன் பதிப்பகம்’ சார்பில் திரு. நந்தா அவர்கள் விந்தனின் நூல்களை படிப்படியாக ஒரு சேர பதிப்பிக்க முன்வந்துள்ளார். ஏற்கெனவே ‘மனிதன்’ இதழ் தொகுப்போடு, விந்தனின் சிறுகதைகள் முழுவதும் இரண்டு பாகங்களாக வெளி வந்துள்ளது. பழைய வாசகர்களோடு இளைய தலைமுறையினரும் ‘விந்தனை’ முழுதும் அறிந்து கொள்ள இது உதவும். அவரது முயற்சியை பெரிதும்போற்ற நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தப் புத்தகத்தை நேர்த்தியான முறையில் வெளியிட உதவிய அனைவருக்கும் என் நன்றி.
அன்புடன்
சென்னை- 43
கோ. சூரியமூர்த்தி
16. 7. 2000