பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - வினாக்களும்

இது பற்றி கவிஞர் சுரதா மாலைமுரசு நிருபரிடம் கூறியதாவது:

தமிழ் மக்களிடையே குறிப்பாக இளய தலைமுறை யினருக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டவே இது போன்ற தலைப்புத் தரும் போட்டிகளில் நான் கலந்து கொள் கிறேன். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கோவிலோ வீடோ அழகான வாயில் இருந்தால் தான் சிறப்புப் பெறுகிறது. அது போல கவிதைக்கும் அழகிய தலைப்பு அவசியம்.

தலைப்புப் போடும் ஆர்வம் வந்து விட்டால் கதைகவிதை எழுதும் துடிப்புத் தானாகவே வந்து விடும்.

புதுக்கவிதையைப் போல இது போன்ற தலைப்புகளும் மக்கள் இதயங்களைக் கவரத்தான் போகிறது.

சுரதாவைச் சந்தித்தவர் மாலை முரசு நிருபர் இதழ்: சேலம், மாலை முரசு, 1-7-1983