பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் பார்வையில் அய்யா-அண்ணா

உலகத்து மனித வாழ்க்கைக்கு வேண்டிய கருத்து களைச் சொன்னவர் பெரியார் மட்டுமே. மற்றவர்கள் சில கருத்துகளைச் சொல்லாமல் விட்டு விட்டார்கள். மறந்து விட்டார்கள். ஆனால் எல்லாக் கருத்துகளையும் கூறியவர் பெரியார் மட்டுமே.

கடவுளை வைத்துக் கொண்டு சீர்திருத்தம் செய்ய எல்லோரும் முயன்ற போது கடவுள் இல்லாமல் சீர்திருத்தம் செய்தவர் பெரியார், காலத்தால் பிந்தியவராக இருந்தாலும் கருத்துகளால் எல்லோரையும் முந்தியவர்.

மற்றவர்களின் கருத்துகள் எல்லாம் இலக்கிய நயமாக இருந்தது. அதனில் அவர்களின் அறிவுதான் இருந்தது. ஆனால், பெரியாரின் கருத்துகள் மற்றவர் களையெல்லாம் அறிவாளியாக்கியது.

மற்றவர்களின் கருத்துகள் ஒருவனின் முதுகை மட்டும் தடவிக் கொடுப்பது போல் இருந்தது. ஆனால் பெரியாரின் கருத்துகள் நெஞ்சைத் தைப்பதுபோல் இருந்தது. தைப்பில் துன்பம் இருக்கலாம். ஆனால் அதில் தான் மாற்றம் உண்டு.

மற்றவர்கள் எல்லோரும் அணையில் இருக்கும் தண்ணிரை வெளியில் திறந்து விட்டவர்கள். பெரியார் மட்டுமே மறைந்திருந்த நிலத்தடி நீரை வெளியில் கொண்டு வந்தவர்.

உலக வரலாற்றில் கிரேட் என்ற பெயர் ப்ட்டியலில் பார்க்கும் பொழுது, பெரியார் (கிரேட்) என்ற பெயர் ஈ.வெ.ராவுக்கு மட்டும்தான் உண்டு. மற்றவர்கள்