பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விட்ைகளும் 121.

தெடுப்பில் நான் கலந்துகிட்டேன். இந்த வருட விவகாரம் பற்றியும் கேள்விப்பட்டேன்.’’ என்றார்.

போட்டிக்கு வந்திருக்கிற நூல்கள் எவை என்பது கூட நடுவர்களுக்குக் கடைசிவரை தெரியாது. பரிந் துரைக்கப்பட்ட நூல்களை நடுவர்களுக்கு அனுப்புவதும் இல்லை. கடைசி நாள் எல்லோரும் போய் உட்காருவோம். கூல் டிரிங்க்ஸ் குடிக்கிற நேரத்தில் புத்தகங்களைத் தேர்ந் தெடுத்துடுவோம். விருதுக்குரிய புத்தகம் எதுன்னு முதலிலேயே முடிவானதே! அங்கே எங்களுக்கு என்ன வேலை? நான் நடுவர் குழுவில் இருக்கிற விஷயமே எனக்குத் தேர்ந்தெடுப்பு தினத்துக்குப் பத்து நாள் முன்னாடிதான் தெரியும். மற்றபடி பரிசீலனைக்கு வர்ற நூலைப் பற்றி ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக் கேள்விப் படறதுதான். அதைப் படிச்சுப் பார்க்கிற விவகார மெல்லாம் கிடையாது’ என்றார் சுரதா,

சுரதாவைச் சந்தித்தவர் : கே. அசோகன் இதழ் : ஜூனியர் விகடன், 17-6-1987