பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாக்களும்

விரும்பப்படுகின்ற ஒன்று. ஆகையினாலே ஆபாசம் பாடல்களில் இல்லை, மக்களின் மனதில் தான் உள்ளது. முகத்தில் புண் இருக்கிறது என்பதற்காக முகமே நன்றாக இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

கேள்வி : அக்கால திரையுலகத்தையும் இக்கால திரை

பதில் :

யுலகத்தையும் ஓர் ஒப்பாய்வு செய்கிற போது இக்காலம் தரம் குறைந்துள்ளதே?

அப்படிச் சொல்லி விட முடியாது காலத்தின் தேவைகளுக்கும், கட்டாயத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். எனவே ஒப்பாய்வு என்பது தேவையற்றது. ஒவ்வொரு காலத்திலும் அந்தந்தகாலத்துசுவைக்கு ஏற்ப படைக்கிறார்கள்.

கேள்வி : இப்போது உங்களைத் திரையுலகில் பார்க்க

முடியவில்லையே?

பதில் : அரசியலில் முன்னாடி வேட்பாளராக நின்னவரு

இன்று நிற்க மாட்டாரு. அது போலத்தான் நானாக நிறுத்திக் கொள்ளவில்லை, அழைப்பு வந்தால் இன்றும் தயாராக உள்ளேன். வருங்கால இளந்தலைமுறைகளுக்கு வழிவிடுவோம் என்னும் எண்ணமும் என்னுள் இருக்கிறது.

கேள்வி : இன்று உங்களுக்கு வாய்ப்பு இல்லாமைக்குக்

காரணம் உங்கள் கருத்து அவர்களுக்குப் பிடிக்க வில்லையா? அல்லது அவர்களின் விருப்பத்திற்கு நீங்கள் எழுதாததாலா?

பதில் அப்படியொன்றுமில்லை. நாலு பேர் இருந்தால்

நாலு பேரையும் கூப்பிடுவார்கள். நூறு பேர் இருக்கும் போது எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்க வாய்ப்பில்லை.