பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வினாக்களும்

இந்த அதிவீரராம பாண்டியன் காரியத்தை அவசியம் செய்தாக வேண்டும், நாட்டிலே உள்ள நல்லவர்கள் தமிழின் நலம் கருதி.

'இசையமைப்புக்குப் பாடல் எழுதுவதா? எழுதிய பாடலுக்கு இசை அமைப்பதா?’ என்று கேட்டால் இசையமைப்பு சிறப்பாக இருந்தால், அதற்குப் பாடல் அமைப்பதும், பாடல் சிறந்து விளங்கினால், அதற்கு இசை அமைப்பதும் நல்லது.

படாதிபதிகளும், இ ைச ய ைம ப் ப ா ள ர் க ளு ம் தமிழிச்ையைப் ப ர ப் பு வ த ற் கு ப் பாடுபடவேண்டும், பிற நாட்டு இசையை நாம் புறக்கணிக்க வேண்டியதில்லை. ஊமைக் காற்று இசையாக மாறி, எங்கிருந்து வந்தாலும், அதனை வரவேற்பதில் தவறில்லை. ஆனால், கோவலன் மனப்பான்மை கொண்டு, பிறநாட்டுச் சங்கீதத்திடம் நம் காதுகளை மட்டும் விற்றுவிடக் கூடாது.

சுரதாவைச் சந்தித்தவர் : அருண்? இதழ் : குமுதம், 10-3-1958