பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 25

உலகம் தரமான இலக்கிய ஏடு: காஞ்சி அமிழ்தன் எழுத்தாளர்களை உருவாக்கி விடுவதில் மற்றும் ஒரு நாரண-துரைக்கண்ணனாக இருக்கிறார் அ முது என்பது தவறு அமிழ்து என்பதுதான் சரி. அமிழ்தன் என்று அவர் பெயர் வைத்திருப்பதே அவரது கல்வியைக் காட்டுகிறது. அவரை நான் முதலில் முழுவதாக அறியவில்லை. எனினும் அறிந்திருக்கிறேன். அவர் சிறந்த கவிஞர். அவருடைய பெருந் தமிழர் பக்தவத்சலம் மிக அருமையான நூல். வாழ்க்கை வரலாறு எப்படி இருக்கவேண்டும் என்று அறிவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நூல். என்னிடத்தில் மட்டும் பொறுப்பு இருக்குமேயானால் சாஹித்ய அகாடமி பரிசை அந்நூ லுக்குத்தான் கொடுப்பேன் ஆசிரியர் அமிழ்தன் இன்னும் பரபரப்பை உண்டாக்கும் வகையில் உலகத்தை' விளம்பரம் செய்யவேண்டும். இனிமேல் உலகத்தின் எதிர் காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். உலகத்தின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும என் தொண்டுஎன்றும் உண்டு’ என்று கூறி முடித்தார்.

நான் பேட்டியை முடித்துக் கொள்கின்ற பாவனை யில் உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டோம்' என்றேன். அமிழ்தனும் இருக்கையை விட்டு எழுந்தார். :அதெல்லாம் ஒன்றுமில்லே. மிக்க மகிழ்ச்சி' என்று கூறிக் கவிஞரும் எழுந்தார். அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம். கவிஞர் வழி அனுப்பி வைத்தார். அந்த வீட்டை விட்டுப் பிரிந்த போது ஒரு கவிதைக் கோயிலைத் தரிசித்து மகிழ்ந்த நிறைவு எங்கள் நெஞ்சில் பொங்கி வழிந்தது. மகாகவி சுரதா வாழ்க’ என் எங்கள் நெஞ்சம் வாழ்த்தின. -

சுரதாவைச் சந்தித்தவர்கள்: எழில் முதல்வன், காஞ்சி அமிழ்தன் இதழ். உலகம், 1-3-1961

வி-2