பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 29

காரணம் பெரியாரின் கொள்கையில் எனக்கிருந்த ஈடுபாடுதான்.

கேள்வி : கவிதை ஆற்றல் பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் :

பிறவியிலேயே ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்பதெல்லாம்பித்தலாட்டம்.ஒரு பொருளையோ, அல்லது நிகழ்ச்சியையோ பார்த்து உணர்ச்சிவசப் பட்டுப் பாடுதல் என்ற பழக்கமும் எனக்குக் கிடையாது. எந்தப் பொருளைப் பற்றியும் உட்கார்ந்து சிந்தித்துத் தான் எழுதுவேன்.பிள்ளை பெற வேண்டும் என்பதற்காகப் புணர்வதில்லை; அதுபோலக் க வி ைத ஆவேசத்துக்காக எப்பொருளையும் பார்ப்பதில்லை.

கேள்வி : கற்பனை ஆற்றல் பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் : கவிதைக்குக்கற்பனை தேவையில்லை. கண்ணாடி,

எதிரில் உள்ள உருவத்தைத்தான் காட்டும்; வேறு உருவத்தைக் காட்டுவதில்லை. உலகத்தை அப்படியே காட்டுவதுதான் கவிதை. ஒன்றை ஒன்றோடு ஒப்பிட்டுச் சிந்திப்பதுதான் கவிதைக் கொள்கை. நான் பச்சையப்பன் கல்லூரியில் பேசும் போது இக்கருத்தை வெளியிட்டேன். டாக்டர் மு. வ. இக்கருத்தைப் பாராட்டினார்.

கேள்வி : உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம்

பதில் :

என்ன?

நுட்பமான சிந்தனை; ஒதுங்கிய சிந்தனை. ஒரு கவிஞன் சிறந்த சிந்தனையாளனாக இருக்க வேண்டும். நான் கவிதையில் எந்தக் கருத்தைச் சொன் னாலும், எனக்கு முன் வாழ்ந்த கவிஞர்கள் சொன்ன முறையிலிருந்து மாறிப் புதுமையாகச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். சற்று ஒதுங்கிச் சிந்திப்பேன். வெள்ளை முயலைப் பார்த்தவுடன், தும்பைப் பூப் போன்ற வெள்ளை