பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வினாக்களும்

மேலும் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளிலும் மற்ற துறைகளிலும் தமிழ் நாட்டில் தமிழர்களுக்குத்தான் அதிக வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

பெரியார் மாவட்டம்

கோவை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க இருப்ப தாகக் கேள்விப்பட்டேன். ஈரோடு மாவட்டம் என்பதை பெரியார் மாவட்டம் என்று பெயரிட வேண்டும்.

தமிழக முதல்வர் கருணாநிதி சிறந்த ஆற்றல் படைத்தவர். அவர் நினைத்தால் பல காரியங்களை நிறைவேற்ற முடியும். பல நல்ல காரியங்களைச் செய்தவர்; செய்து வருபவர். ஈரோடு மாவட்டம் என்பதை பெரியார் மாவட்டம் என்று மாற்றியமைக்க முயற்சி செய்வார்; செய்ய வேண்டும் என்ற என் கருத்தை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுரதாவைச் சந்தித்தவர் : சே.ப. குட்டியப்பன் இதழ் தமிழ் முரசு, 15-4-1974