பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 75

எழுச்சிக் கவிதைகளை இயற்றியவர் கவிஞர் பாரதிதாசன். தமிழ் உலகில் சாதாரண மக்களும் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பாடல் இயற்றியவர் பாரதிதாசன். தற்போதைய தமிழக முதல்வர் எம். ஜி. ஆரின் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நல்லபடியே ஆள்கிறார். இவர் வந்த பிறகு கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் சிறப்பு என்று தான் சொல்ல வேண்டும். - முன்னாள் முதல்வரின் தமிழ்ப்புலமை-அரசியல் ஆற்றலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரின் தமிழ்ப்புலமையும் அரசியல் ஆற்றலும் பாராட்டப்பட வேண்டிய அம்சங்களே, கலைஞர் ஒரு சிறந்த மனிதர்.தமிழ்நாட்டுக்குத் தமிழர்க்குக் கிடைக்கப்பெற்றது அருமை.

சுரதாவைச் சந்தித்தவர் : பழ. எ. அன்பழகன்

இதழ் : தமிழ் மலர், (கோலாலம்பூர், மலேசியா)

3-6-1979.