மேகத்தின் நிழல் பாலைவனத்தின் மேலே!
தலைப்புத் தரும் போட்டியில் மேகத்தின் நிழல். பாலைவனத்தின் மேலே என்று கூறிய சேலம் கல்லூரி மாணவர் வெற்றி பெற்றார். அவருக்குக் கவிஞர் சுரதா பரிசு வழங்கினார்.
திருமண விழா
சேலம் குஜராத்தி கல்யாண மண்ட்பத்தில் கலெக்டர் அலுவலக உதவியாளர் விட்டல்தாஸ் தங்கை சாந்திக்கும் கோவிந்தனுக்கும் திருமணம் நடந்தது. மாவட்ட தி க. தலைவர் க. சண்முகம் தலைமை தாங்கினார். உவமைக் கவிஞர் சுரதா முன்னிலை வகித்தார். .
தி.க. பொதுச் செயலாளர் வீரமணி, எஸ். சி. வெங்கடாசலம், வலங்கை விசு, கவிஞர் நாமக்கல் நாதன் வாழ்த்திப் பேசினார்கள். x
தலைப்புப் போட்டி
இந்த விழாவில் உவமைக் கவிஞர் சுரதா பார்வையாளர் களுக்குத் தலைப்புத் தரும் போட்டியை நடத்தினார்.
இதில் பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் தலைப்புகளை எழுதிக் கொடுத்தனர். .
இதில் மேகத்தின் நிழல் பாலைவனத்தின் மேலே: என்ற தலைப்பை சுரதா தேர்ந்து எடுத்தார்.
இந்தத்தலைப்பை எழுதியவர் சேலம் கல்லூரி மாணவர் ஏ. பி. சண்முகம். அவருக்குச் சுரதா ரூ. 25 பரிசு வழங்கினார்.
ി-6