பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அவற்றில் மிகப் பெரிய மூன்று பழங்களைப் பறித்து மிகவும் சிரமப்பட்டு வீட்டுக்குக் கொண்டு போனான். அவை அவ்வளவு கனமாக இருந்தன.

வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்தான் அந்தக் குடியானவன். முலாம் பழங்களில் ஒன்றை எடுத்து, அதை நறுக்கி விருந்து படைக்க நினைத்தான். ஆனால் கத்தியினால் முலாம் பழத்தின் மேல் தோலைக் கூட அவனால் கிழிக்க முடியவில்லை. அவ்வளவு கெட்டியாக இருந்தது. மற்ற பழங்களை எடுத்து நறுக்க முயன்றான்; அவற்றையும் நறுக்க முடிய வில்லை.

எனவே ஒரு பெரிய கத்தியை எடுத்துத் தன் பலத்தையெல்லாம் சேர்த்து ஓங்கி ஒரு போடு போட்டான். முலாம் பழம் விரிசல் கண்டது. அதன் உள்ளே சாறு இருப்பதற்குப் பதிலாக, தங்க நாணயங்கள் இருந்தன. மற்ற இரண்டு,முலாம்