பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

 அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர் மூன்று முலாம் பழக் கொடிகள் ஒவ்வொன்றிலும் பத்துப் பத்து முலாம் பழங்கள கனிந்தன. அவை அனைத்திலுமிருந்தும் தங்க நாணயங்கள் கிடைத்தன. ஏழை பெரிய பணக்காரனாகி விட்டான்.

பக்கத்தில் ஒரு செல்வந்தன் வசித்து வங்தான். அவன் இந்தக் குடியானவனிடம் வந்து, "நீ எப்படி இவ்வளவு பெரிய பணக்காரனாக கேட்டான்.

முன்பு மிக ஏழையாக இருந்த அந்த நல்ல மனிதன் கடந்த விவரம் முழுவதையும் பணக்காரனிடம் கூறினான்.

"சரி, நமக்கும் கிடைக்குமா பார்க்கலாம்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அங்தப் பேராசைக்காரன் தனது கழனியை நோக்கிப் போனான். அந்தக் கொக்கு அவன் பார்வையில் பட்டது, அதற்குத் தெரியாமல் வஞ்சகத் தனமாக